Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

Senthil Velan
வியாழன், 16 மே 2024 (14:09 IST)
இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரும், உலகம் முழுவதும் 1.53 லட்சம் பேரும் உயிரிழப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அதன் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக அளவில் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் வெப்ப சலனம் காரணமாக ஆண்டுக்கு சுமார் 30,000 பேர் உயிரிழப்பது ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கப்பட்டுள்ளன.
 
ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 1.53 லட்சம் இறப்புகளில், இந்தியாவில் அது 20 சதவீதமாக உள்ளது. வெப்ப சலன இறப்புகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவில் உயிரிழப்பு 14 சதவீதம், ரஷ்யாவில் 8 சதவீதமாக உள்ளன.

ALSO READ: மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!
 
இந்த ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் கோடையில் 1.53 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் ஆசியாவில் இறப்பதாக மோனாஷ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments