Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராக்கில் 18 துருக்கியர்கள் கடத்தல்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2015 (16:26 IST)
இராக்கில் ஒரு கட்டுமானத் தளத்திலிருந்து தமது நாட்டவர்கள் 18 பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என துருக்கி தெரிவித்துள்ளது.

தலைநகர் பாக்தாத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் விளையாட்டு மையமொன்றில், கேரவேனில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை இராணுவ சீருடையில் முகமூடி அணிந்தபடி வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இஸ்லாமிய அரசினர் என்று தம்மைக்கூறிக்கொள்ளும் குழுவினருக்கு எதிரான விமானத் தாக்குதல்களை துருக்கி அண்மையில் ஆரம்பித்திருந்தது.

மேலும், துருக்கிய விமான தளங்களிலிருந்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல்களை நடத்துவதற்கும் அந்நாடு அனுமதி வழங்கியிருந்தது.

இது தவிர, வட சிரியாவில் ஐ.எஸ்.குழுவினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்குப் பிறகு துருக்கிய சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments