Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் கறி திருவிழா எதிரொலி: 110 சீன நாய்கள் கனடாவில் தஞ்சம்

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (15:07 IST)
நாய் கறி திருவிழாவில் இருந்து நாய்களை காப்பாற்ற கனடாவின் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் 110 சீன நாய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றது.


 

 
சீனாவின் யுலின் மாகாணத்தில் ஆண்டுத்தோறும் டிசம்பர் மாதத்தில் நாய் கறி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா அன்று நாய் இறைச்சி விற்கப்படும். மக்கள் இறைச்சியை வாங்கி சமைத்து, உண்டு மகிழ்வார்கள். இதன்மூலம் குளிர்காலத்தில் அவர்களது உடல்நலம் நன்றாக இருக்கும் என்று நம்புகின்றனர்.
 
இதற்கு சமூக நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் இதைத்தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கனடாவின் சர்வதேச இரக்க சிந்தனை சங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
 
இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் யுலின் பகுதிக்கு சென்று அங்கிருந்து 110 நய்களை கூண்டில் அடைத்து கனடாவுக்கு கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின் நாய்கள் காப்பற்றப்பட்டதாகவும், இனி அவை சுதந்திரமாக வளரும் என்று கனடாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments