Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருக்கி-சிரியா நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் என அமெரிக்கா தகவல்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:54 IST)
துருக்கி-சிரியா நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் என அமெரிக்கா தகவல்!
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பத்தாயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று அதிகாலை துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பயங்கர நிலநடக்கம் ஏற்பட்டதை அடுத்து இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சற்று முன் இரண்டாவது முறையாக மீண்டும் நில நடக்கும் ஏற்பட்டுள்ளதை அடுத்து பல கட்டிடங்கள் குலுங்கி தரைமட்டமாகி இருப்பதாகவும் இந்த இடிபாடுகளில் ஏராளமான சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இதுவரை 1300க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக கூறப்பட்டிருக்கும் நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது இரண்டு சதவீதமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments