Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்

Suresh
திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:18 IST)
திரவமாக மட்டுமன்றி, உணவிலும் கலந்து சாப்பிடக்கூடிய ஆல்கஹால் பவுடர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
மதுபானங்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து  தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது பவுடர் ஆகவும் கிடைக்கவுள்ளது.
 
‘பால்கஹால்‘ என்று பெயரிப்பட்டுள்ள இந்த ஆல்கஹாலை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் விற்பனையைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதை உணவு வகைகளில் கலந்தும், தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம்.
 
இது 7 விதமான சுவைகளில் கிடைக்கும் என்றும்,  அவற்றுக்கு மர்கார்டியா, காஸ்மோபாலிட்டன், பவுடரிடா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் ஆல்கஹால் மற்றும் புகையிலை வரிவிதிப்பு வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments