விநாயகர் சதுர்த்தி வழிபாடு முறைகள்!
விநாயகர் சதுர்த்தி அன்று கடைபிடிக்க வேண்டிய பூஜை முறைகள்
Webdunia
1. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலில் கட்டி வைக்கலாம்.
3. பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைத்து, அதன்மேல் ஒரு கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும்.
4. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
5. பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்களை பாடலாம்.
6. பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயாசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
7. இந்த விரதத்தை காலையில் இருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம்.
8. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள்.
Webdunia
religion
அதிக அளவு லெமன் டீ பருகுவதால் இவ்வளவு ஆபத்தா..?
Follow Us on :-
அதிக அளவு லெமன் டீ பருகுவதால் இவ்வளவு ஆபத்தா..?