அதிகமான உப்பு சேர்த்தால் ஏற்படும் ஆபத்துகள்..!

உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டால் உடலுக்கே ஆபத்தானதாகவும் அமைகிறது. உப்பு எவ்வளவு சேர்த்துக் கொள்ள வேண்டும், அதிகம் சேர்த்தால் என்ன ஆகும் என பார்ப்போம்.

Various Source

அன்றாட உணவில் சுவைக்காக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள சோடியம் உடலுக்கு அவசியமானதும் கூட

ஒரு நாளைக்கு மனித உடலுக்கு 1500 முதல் 2300 மில்லி கிராம் (ஒரு டேபிள் ஸ்பூன்) சோடியம் தேவைப்படுகிறது.

இதற்கு மேலான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளும்போது அது உடலின் பல பகுதிகளை பாதிக்க தொடங்குகிறது.

அதிகமான உப்பு எடுத்துக் கொள்வதால் அது செல்களுக்குள் உற்பத்தியாகும் நீருடன் இரத்தத்தில் கலந்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Various Source

அதிக அளவிலான சோடியம் சிறுநீரகத்தை பாதிப்பதால் சிறுநீரகத்தில் கல் மற்றும் பிற கோளாறுகள் ஏற்படுகின்றன.

Various Source

உப்பை அதிகமாக பயன்படுத்துவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவை ஏற்படும்.

Various Source

அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படும் சோடியமானது எலும்பில் உள்ள கால்சியத்தை கரைப்பதால் எலும்புப்புரை நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

ருசிக்காக பார்க்காமல் உடல் நலத்திற்காக தேவையான அளவுக்கு மேல் உப்பு சேர்க்காமல் இருப்பது நன்மை பயக்கும்.

மூங்கில் அரிசியில் இவ்வளவு மருத்துவ பயன்களா..?

Follow Us on :-