வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிர்ழக்கும் அபாயம்.
வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் வனவிலங்குகள் உயிர்ழக்கும் அபாயம். வால்பாறை-டிச-1 கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு ஆறுவனசரகத்துக்கு உட்பட்டது,வால்பாறை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 56 தேயிலைத் தோட்டகள் உள்ளன, வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் இப்பகுதியில் காட்டு மாடுகள, வரையாடுகள், காட்டு யானைகள், புலி, சிறுத்தைகள் என பல விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. அப்பகுதி காடுகள் சூழ்ந்து இருந்தாலும் அதிகமாக தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளாலும் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அப்பகுதியில் தேங்கி கிடப்பதால் தேயிலை தோட்டத்திற்கு வரும் வனவிலங்குகள் பிளாஸ்டிக் குப்பைகளை ஒன்னும் நிலை ஏற்படுகிறது. இதனை வனத்துறையும் மற்றும் நகராட்சியும் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.