பெண்களுக்கான வூசு போட்டியில் அதிரடி காட்டி அசத்திய மாணவிகள்
கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வூசு போட்டிகள் கோவையில் நடைபெற்றது.இந்திய மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் ,மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,கர்நாடகா,கேரளா,மணிப்பூர்,ராஜஸ்தான்,டெல்லி,என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.சான்சூ,டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் ,பதக்கங்கள் வழங்கப்பட்டது.இதில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.