மதுரையில் அடையாளம் தெரியாத நபரால் இளம் பெண் குத்திக் கொலை
மதுரையில் அடையாளம் தெரியாத நபரால் இளம் பெண் குத்திக் கொலை
மதுரை தெற்கு வாசல் சப்பானி கோவில் பகுதியைச் சார்ந்தவர் வர்ஷா. இன்று தன் வீடு அருகே ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத நபரால் வர்ஷாவின் உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
வர்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி பழனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வர்ஷாவுக்கும் பழனிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வர்ஷா தனது தாய் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று தனது வீடு அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது ஹெல்மெட் அணிந்த அடையாளம் தெரியாத நபரால் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வாசல் போலீசார் வர்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பழனியிடம் விசாரணை மேற்கொள்ள பழனியை தேடி வருகின்றனர்.