மின்கட்டணம், பால்விலை, சொத்து வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட அஇஅதிமுக உண்ணாவிரத போராட்டம்
மின்கட்டணம், பால்விலை, சொத்து வரி உயர்வை கண்டித்தும் கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் கோவை மாவட்ட அஇஅதிமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
கோவை சிவானந்தா காலனி பகுதியில் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, பால் விலை கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும் கோவை மாவட்ட அஇஅதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதல்வரும் கழக இடைக்கால பொது செயலாளருமன எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.