மழைக்கேற்ற வாழைப்பூ வடை

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (13:56 IST)
தற்போது மழைக்காலம் அதனால் சுவையான வாழைப்பூ வடை சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


 

 
தேவையான பொருட்கள்:
 
பொடியாக நறுக்கிய வாழைப்பூ  - 1 கப்
கடலைப்பருப்பு - 2 கப்
உளுத்தம் பருப்பு  -  ஒரு கைப்பிடி
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி  - சிறிதளவு
புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
 
தயார் செய்து கொள்ள வேண்டியவை:
 
1. வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
 
2. கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற  வைத்துக் கொள்ளவும்.
 
3. ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 
 
செய்முறை:
 
அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ,  வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து  வைத்து கொள்ளவும். மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
 
சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெற்றியில் சுருக்கங்கள் இருக்கிறதா? எப்படி மறைய வைப்பது?

மணத்தக்காளி கீரையின் மகத்துவங்கள்: வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து!

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு.. எது சிறந்தது?

தலைசீவும் சீப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்..!

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?

Show comments