மசாலா மோர் செய்ய வேண்டுமா....

Webdunia
தேவையானவை: 
 
தயிர் - 500 மில்லி
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
தண்ணீர் - ஒரு லிட்டர்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

 
 
செய்முறை: 
 
கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.  தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி  வைக்கவும். பிறகு, வடிகட்டி எடுத்து பரிமாறவும்.
 
குறிப்பு: 
 
வெயில் காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இந்த மசாலா மோர் கொடுத்து உபசரிக்கலாம். இதை ஃப்ரிட்ஜில்  வைத்தும் கொடுக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு அற்புத பானம் இந்த மசாலா மோர். நீங்களும் சுவைத்து பார்த்து  ருசித்துடுங்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments