Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேங்காய்ப்பால் பிரியாணி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பிரியாணி அரிசி - 1 டம்ளர் பீன்ஸ்
கேரட் - 3
காலி பிளவர் - 2
பச்சைப் பட்டாணி - சிறிதளவு
உருளைக் கிழங்கு - 3
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20 
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய் - 6
வெள்ளைப் பூண்டு உரித்தது - 6 பல்லு
பெரிய தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக்  கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
பொடித்து வைத்துள்ள மசாலாக்கள் மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேகவைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான  தேங்காய்ப்பால் பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments