Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதான முறையில் கேரட் சாதம் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி - 2 கப் (சாதம் உதிரியாக)
பெரிய கேரட் - 3 (துறுவியது)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகாய் - 3
மஞ்சள் - சிறிது
கருவேப்பிலை, பட்டை - சிறிதளவு
கடுகு, உளுந்து. கடலை பருப்பு - தாளிப்பதற்கு ஏற்ப


செய்முறை:
 
அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து சாதம் வடித்து, உதிரியாக தயார் செய்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து விட்டு பிறகு மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 
 
பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் துருவிய கேரட்டை கொட்டி 50 மில்லி தண்ணீர் சேர்த்து கிளரி உப்பு சேர்த்து வேக விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு இறக்கி சாதத்துடன் சேர்த்து கிளரினால் சுவையான கேரட் சாதம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments