சௌசௌ காயில் சட்னி செய்யலாம் தெரியுமா...?

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (17:53 IST)
தேவையான பொருட்கள்:

சௌசௌ - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு - தேவைக்கு ஏற்ப.

சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது.


செய்முறை:

சௌசௌ, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ, காய்ந்த மிளகாய், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.

வதக்கியதை ஆறவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விடவும். விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சுவையான சௌசௌ சட்னி தயார்.

குறிப்பு: இந்த சட்னி தயார் செய்ய இளம் சௌசௌவை தேர்வு செய்யவும். சௌசௌ கலவையை அதிக நேரம் அடுப்பில் வைத்து வேக விட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments