எளிதான முறையில் சுவையான காரா சேவ் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கடலை மாவு - 2 1/2 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
நெய் - 2 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
முதலில் மிக்ஸியில் மிளகை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நெய், மிளகாய் தூள், மிளகுப் பொடி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி மென்மையாகவும், முறுக்கு மாவு பதத்திற்கும் பிசைந்து கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய்யானது சூடானதும், முறுக்கு அச்சை எடுத்து, அதனுள் மாவை வைத்து, எண்ணெய்யில் பிழிய வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான காரா சேவ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments