Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுகதைகள்

விடுகதைகள்
, செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:17 IST)
உ‌ங்க‌ள் தா‌த்தா, பா‌ட்டிக‌ள் சொ‌ல்‌லி‌க் கொடு‌த்த ‌விடுகதைகளாக இரு‌ந்தா‌ல் ப‌தி‌ல் சொ‌ல்‌லி‌விடு‌வீ‌ர்க‌ள். அ‌வ‌ர்க‌ள் மற‌ந்‌திரு‌ந்தா‌ல் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌விடைகளை‌ப் படி‌த்து‌வி‌ட்டு நாளை உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்‌கள‌ட‌ம் கே‌ட்டு‌ப் பாரு‌ங்க‌ள்.

1. அப்பா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டேன். நிற்கலே...

அது என்ன?

2. உருவத்தில் சிறியவன், உழைப்பிற்கு பெயர் போனவன்

அவன் யார்?

3. அறைகள் எல்லாம் சேர்த்தால் அறுநூறு வரும். ஆனால் எல்லா அறையும் ஒரே அளவு
அது என்ன?

4. அங்கும் இங்கும் திரிந்து பாடுவான். ஆனால் உடலுக்கு ஊசி போடுவான்.

அவன் யார்?

5. ஐந்து பேரில் இளையவன், கல்யாணத்துக்கு மட்டும் மூத்தவன், அவன் யார்?

6. இலையுண்டு கிளையில்லை, பூ உண்டு காய் இல்லை அது என்ன?

7. எரிப்பவன் ஆனால் எரியாதவன், அவன் யார்?

விடைக‌ள் அடு‌த்த‌ப் ப‌க்க‌த்‌தி‌ல்...

விடைக‌ள்

1. தாமரை இலை
2. எறும்பு
3. தேன்கூடு
4. கொசு
5. சுண்டுவிரல்
6. கரும்பு
7. சூரியன்

Share this Story:

Follow Webdunia tamil