Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைடு கேப்பில் உள்ளே நுழைய முற்படும் எடியூரப்பா - கர்நாடக அரசியலில் பரபரப்பு

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (15:59 IST)
காங்கிரஸ் - மஜத மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை அவர்களின் வீட்டிற்கே சென்று பாஜகவிற்கு வருமாறு அழைப்பு விடுங்கள் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
 
கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஒருநாள் முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த எடியூரப்பா ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் மஜத வுடன் கூட்டணி அமைத்து, பின் மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.
 
இதனையடுத்து இலாகா ஒதுக்குவதிலும், அமைச்சர் பதவி பிரித்ததிலும் காங்கிரஸ் - மஜதவினரிடையே மோதல் இருந்தது. இருந்தபோதிலும் அந்த பிரச்சனை பேசி முடிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் - மஜத எம்.ஏ.க்கள் பலர் அக்கட்சியின் மீது அதிருப்திக்கு ஆளானர். குமாரசாமி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என சித்தராமையா கூறியதால் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் பாஜக செயற்குழுக்கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, பாஜக ஆட்சியில் அமரவே மக்கள் விரும்பினர், ஆனால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த ஆட்சி அமைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் - மஜத மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களை அவர்களின் வீட்டிற்கே சென்று பாஜகவிற்கு வருமாறு அழைப்பு விடுங்கள் என கூறினார். பின் அதற்கு அவசியம் இருக்காது என்றும் பொருந்தாத கூட்டணியால் அரசு விரைவில் கவிழும் என்று பகிரங்கமாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments