Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் மைத்துனர் மருத்துவமனையில் அனுமதி: அதிமுக அமைச்சர் காரணமா?

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (22:02 IST)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி என்பவர் இன்று மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தமே தனது உடல்நலக்குறைவுக்கு காரணம் என்றும் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
நாகை மாவட்டம் ஆக்கூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ள ராஜமூர்த்தி திடீரென இன்று நெஞ்சுவலி காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
அமைச்சர் ஓ.எஸ். மணியன் மட்டுமின்றி பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் அவர்களும் அரசியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக தான் மிகுந்த மன அழுத்தம் அடைந்திருப்பதாகவும் ராஜமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ராஜமூர்த்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பூம்புகார் எம்.எல்.எ பவுன்ராஜ் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments