திருவாரூரில் போட்டியிட ஸ்டாலின் விரும்பவில்லை: திடீர் திருப்பத்திற்கு காரணம் என்ன?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (22:56 IST)
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று திமுக வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் திடீர் திருப்பமாக திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட சாத்தியக்கூறு இல்லை என பூண்டி கலைவாணன் பேட்டி அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூரில் போட்டியிட ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்பி அவரது ரசிகர் மன்றத்தினர் பெயரில் விருப்ப மனு தரப்பட்டுள்ளதால் அவரது பெயர் பரிசீலனை இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் பூண்டி கலைவாணன் மேலும் தெரிவித்தார்.

திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள் என்றும், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருவாரூர் தேர்தலில் வெற்றி பெற்றால் பின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அதனால் ஸ்டாலின் போட்டியிட விரும்பவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தான் போட்டியிட்டால் அதிமுக, அமமுகவும் கைகோர்க்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் ஸ்டாலின் கருதுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தியாரின் பெயரை காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை: கமல்ஹாசன்

கோவை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு.. வெளியேற்றப்பட்ட தவெக தொண்டர்கள்..!

ஈரோட்டுக்கு வருபவர் பக்கத்தில் இருக்கும் கரூருக்கு வராதது ஏன்? விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்..!

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments