Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் ஸ்ரீகாந்த் போராடி வெற்றி

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:50 IST)
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.
 
கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த், ஸ்பெயின் நாட்டின் பேப்லோ அபியனை எதிர்கொண்டார்.
 
ஆட்டத் தொடக்கத்திலே முன்னிலையில் இருந்த ஸ்ரீகாந்த் முதல் செட்டை கைப்பற்றி(21-15), பின் இரண்டாம் செட்டை(12-21) அபியனிடம் பறி கொடுத்து விட்டார்.  அதன்பின்னர் போராடி 3வது செட்டை(21-14) கைப்பற்றினார்.
 
இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் - அண்ணாமலை.. ஒருவரை ஒருவர் புகழ்ந்ததால் பரபரப்பு..!

ஒவைசியிடம் ரூ.3000 கோடி வக்பு சொத்து உள்ளது: தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் தகவல்..!

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments