நவநீதகிருஷ்ணன் தற்கொலைக்கு தூக்கு கயிறு தர தயார்: தினகரன் ஆதரவாளர்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (19:58 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒட்டுமொத்தமாக மத்திய அரசை குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்துள்ளன.


இந்த நிலையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் ஒரு படிமேலே போய் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த்தபோது, ''காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் கூறினார்.

ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. சொல்லியதை செய்ய தவறியதால் அவர் தற்கொலை செய்ய நான் தூக்குக்கயிறு மற்றும் விஷத்தை தருகிறேன்' எனக் கிண்டலாக கூறினார். புகழேந்தியின் பேச்சு அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments