Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும்- பா.ஜ.க. எம்.பி சர்ச்சைப் பேச்சு

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (12:27 IST)
ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோரை சுட்டுக் கொல்ல வேண்டும் எனஎம்.பி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில்  பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
 
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற மாநிலத்தை ஆளும் பிடிபி-பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி வாட்ஸ், கல்வீச்சாளர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பான செய்தியை படித்தேன். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே கல்வீச்சில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார். அவரது கருத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments