நிர்பயா வழக்கு: மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (15:12 IST)
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்கரம் செய்து கொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரிந்ததே.  ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா உள்பட ஆறு பேர் மீதான வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராம்சிங் திஹார் சிறையில் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் தண்டனை முடிந்து விடுதலையானார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய 4 பேர்களுக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து நால்வரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். டெல்லி ஐகோர்ட்டும் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து மீண்டும் நால்வரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்து சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது. இதனால் குற்றவாளிகளான நால்வருக்கும் விரைவில் தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.. ஈரானுக்கு உதவ முடியாத நிலையில் இலங்கை..!

AI தொழில்நுட்பத்தை போரில் பயன்படுத்திய அமெரிக்கா.. முதல் 24 மணி நேரத்தில் நடந்தது இதுதான்..!

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வீடுகளுக்கு மின்சார கட்டணம் குறைவு.. அதிரடி அறிவிப்பு..!

ஈரான் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு போட்ட இஸ்ரேல்.. ஈரான் பதிலடி கொடுக்குமா?

விஜய் - அண்ணாமலை - சீமான் புதுக்கூட்டணியா? திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்குமா?

அடுத்த கட்டுரையில்