Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலைக்கு மட்டும் உயிருள்ளதா? கனிமொழிக்கு எச்.ராஜா பதிலடி

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (08:39 IST)
உயிரற்ற பட்டேலின் சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி ரூ.350 கோடியா? என திமுக எம்பி கனிமொழி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

திமுகவின் மற்ற தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தாலும் கனிமொழி எம்பியை பொருத்தவரையில் பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாகவே கூறப்பட்டது. ஆனால் அவரும் தற்போது மத்திய அரசை விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கனிமொழியின் இந்த டுவீட்டுக்கு பதிலடி தரும் வகையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியபோது, 'குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை, ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? என கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி பதிவாகி கொண்டிருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments