Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இன்று நேற்று நாளை’ படம் தெலுங்கில் ரீமேக்!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (12:03 IST)
‘இன்று நேற்று நாளை’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’. சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப்  படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அனுபமா குமார்  உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
 
 டைம் மிஷின் மூலம் கடந்த காலம் மற்றும் எதிர்காலங்களுக்குச் சென்று என்ன நடக்கிறது என்பது போல இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு  இருந்தது. ரசிகரிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 2015ம் ஆண்டின் பாக்ஸ் ஆபீஸில் இடம் பிடித்தது. 
 
இந்நிலையில், இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இயக்கிய ஆர். ரவிக்குமார் சிவகார்த்திகேயன் படத்தை  இயக்கி வருகிறார். இதனால் ரவிக்குமாருக்கு பதில் மோகன் கோவிந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழில் ‘இன்று நேற்று நாளை’ படத்தை தயாரித்த சி.வி.குமாரே திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தெலுங்கிலும் தயாரிக்கிறார்.
 
விஷ்ணு விஷால் நடித்த ஹீரோ வேடத்தில், சந்தீப் கிஷன் நடிக்கிறார். ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் இவர்.  விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments