Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு டி20 போட்டி : இந்தியா- இலங்கை இன்று பலப்பரிட்சை

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (11:35 IST)
இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா- இலங்கை மோதும் முதல் நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது.

 
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் இன்று துவங்குகிறது.
 
இந்த டி20 தொடரில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் 3 அணிகளும் தலா 2 முறை நேருக்கு நேர் மோதவுள்ளது.அதில் 6 போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி பைனலில் விளையாட உள்ளது.
 
இந்த நிதாஸ் டிராபி டி20 தொடர் இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைபெறுகிறது. மேலும், நடைபெறும் அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகின்றன. 
 
நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா- இலங்கை மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments