ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் அதிரடி கைது

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (16:13 IST)
ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்து வந்தன. ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள்  திடீரென நஜீப் ரசாக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்கம், ரூ.188 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
இதையடுத்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது. இருப்பினும் நஜீப் ரசாக் தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் பணமோசடி தடுப்பு பிரிவினர் இன்று நஜீப் ரசாக்கின் வீடு புகுந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் மலேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments