விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 பேர் பரிதாப பலி

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (09:13 IST)
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 பேர் மற்றொரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இன்று காலை பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர்.
 
இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஒரு குழு சென்றது. அப்போது மற்றொரு பேருந்து மோதியதில் மீட்க சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் இரு விபத்துகளில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஒரு கோழை!.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்!...

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. வாட்ஸ்அப்பை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!...

அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்தும் நாடுகள் எது?... எவ்வளவு வரி!..

ஆனந்த் அம்பானி வாங்கியுள்ள தங்க கார்!.. எவ்வளவு கோடி தெரியுமா?!...

இந்தியா அப்படி எங்ககிட்ட எதுவும் சொல்லயே!.. டிரம்ப்பை கடுப்பேத்திய ரஷ்யா!...

அடுத்த கட்டுரையில்
Show comments