Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து வாய்திறக்காத பிரதமர்! பாஜக திட்டம் என்ன?

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (19:56 IST)
பிரதமர் மோடி இன்று திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது திமுக-காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தாரே தவிர, அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் பாஜக கூட்டணி குறித்து ரகசிய திட்டம் வைத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
 
பாஜகவை அதிமுக கூட்டணியில் இணைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர்களுக்கு எந்தவித மறுப்பும் இல்லை. ஆனால் தம்பிதுரை உள்ளிட்ட ஒருசில தலைவர்கள் பாஜகவை அதிமுக கூட்டணியில் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவை கூட்டணியில் சேர்த்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு ஏற்படும் என்பதே அவர்களது வாதம், எனவே பாஜக இல்லாத கூட்டணியை அமைக்க அதிமுக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அதிமுகவை தனிமைப்படுத்திவிட்டு பாஜக மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், உள்பட ஒருசில கட்சிகளை இணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி ஏற்பட்டால் திமுகவுக்குத்தான் சாதகமாக முடியும் என்பதும் திமுக வெற்றி பெற்றாலும் அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என்பதும் அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments