நீட் தேர்வில் தோல்வி - விழுப்புரம் மாணவி விஷம் குடித்து தற்கொலை

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (09:24 IST)
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். அதில் தமிழகத்தில் 1.15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அவர்களை அலைக்கழித்ததில், 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். 
 
நேற்று வெளியான நீட் தேர்வின் முடிவுகளில், பீகாரைச் சேர்ந்த கல்பனா குமார் என்ற மாணவி 720 மதிப்பெண்ணிற்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.  தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண் எடுத்து 12ம் இடத்தை பிடித்தார்.
தமிழகத்தை சேர்ந்த 1,14,606 மாணவ - மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். அதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 60 சதவீத மாணவ மாணவிகளால் தேர்ச்சி பெற முடியவில்லை.
 
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது தொடர்கதையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ஒரு லட்சத்திற்கும் கீழே வந்ததால் மகிழ்ச்சி..!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments