Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு தேதி குறித்த தகவல்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (07:35 IST)
தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருதப்படும் 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இந்த வழக்கின்  தீர்ப்பு வரும் 22ஆம் தேதிக்கு பின்னர் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

18 பேர் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் நீதிபதி சத்தியநாராயணன் விடுமுறையில் செல்வதாலும், 13ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதாலும் வரும் 22ஆம் தேதிக்கு பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments