கூவம் ஆ‌ற்றை சுற்றுலா தலமாக மாற்றுவோம்-‌ஸ்டால‌ி‌ன்

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2009 (11:47 IST)
சா‌க்கடை‌‌க் க‌ழிவுக‌ள் கல‌ந்து நா‌ற்றமெடு‌‌த்து வரு‌ம் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, ஆற்றங்கரை பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம் என்று சிங்கப்பூர் சென்று திரும்பிய துணை மு த லமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

த‌மிழக துணை மு த லமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் 4 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று இரவு 10 மணி அளவில் அவர் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌ஸ்டா‌லி‌ன், சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தப்படுத்தி சீரமைத்தல் ‌ ப‌ணியுட‌ன், சென்னையில் நிதி நகரம், தொழில் நகரம் மற்றும் வானூர்தி பூங்கா போன்றவை அமைக்கப்படும் என்று த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் அ‌றி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டது. அதன்படி, இந்த திட்டங்கள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக சிங்கப்பூர் சென்று இருந்தேன்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வானூர்தி பூங்காவை பார்வையிட்டேன். சிங்கப்பூரில் நமது கூவத்தை விட மிக மோசமாக ஓடிக்கொண்டிருந்த நதியை 10 ஆண்டுகளில் சுத்தப்படுத்தி அதன் இரு கரைகளிலும் பூங்காக்கள், அங்காடி மற்றும் பொழுது போக்கு பூங்காக்களை அமைத்து சிறந்த சுற்றுலா இடமாக மாற்றி இருக்கிறார்கள்.

சென்னையிலும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி சிங்கப்பூரை போன்று சிறந்த சுற்றுலா இடமாக மாற்றி அமைக்கப்படும். அதுகுறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சிங்கப்பூர் தொழில் வர்த்தக துறை மூத்த அமை‌ச்ச‌ர ் ஈஸ்வரன், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளை தெரிவித்த ா‌ர் எ‌ன்று கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

Show comments