Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தபால் ஒட்டு எண்ணிக்கை : அதிமுக பின்னடைவு

தபால் ஒட்டு எண்ணிக்கை : அதிமுக பின்னடைவு
, வியாழன், 19 மே 2016 (08:28 IST)
கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற, தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவர்கள் மற்றும் காவலர்கள் அளித்த தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தற்போது  தொடங்கியுள்ளது.


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்குகிறது.  முதலில் தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ணப்படுகிறது. அதன்பின், மற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 68 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. 
 
தமிழகத்தில் மே 7ஆம் தேதி தபால் ஓட்டு தொடங்கி மே 14 ஆம் தேதி வரை செலுத்தப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டுகள் செலுத்தியுள்ளனர். அதிக பட்சமாக 4 லட்சம் பேர் தபால் ஓட்டு அளித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சரியாக இன்று காலை எட்டு மணிக்கு தபால் ஒட்டுகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதில், சென்னை, ஒரத்தநாடு உட்பட 26 இடங்களில் திமுக முன்னிலையிலும், 25 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜீன் 11-ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல்: ராஜேஷ் லக்கானி தகவல்