Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரசாரத்தின் போது திருநாவுக்கரசர் திடீரென மயக்கம்

தேர்தல் பிரசாரத்தின் போது திருநாவுக்கரசர் திடீரென மயக்கம்

Webdunia
வியாழன், 5 மே 2016 (05:31 IST)
அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென மயக்கம் அடைந்தார்.
 

 
மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மதுரையில், அகில காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர். திமுக மற்றும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
 
இந்த நிலையில், மதுரையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திருநாவுக்கரசர் செல்லூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது, பி.பி.குளம் பகுதியில் பிரசாரம் செய்த போது,  திடீரென மயக்கமடைந்து, வேட்பாளர் மீது சாய்ந்தார். இதனால், உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநாவுக்கரசர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments