Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அமைச்சர் சம்பத் மீது செருப்பை வீசிய பொதுமக்கள் : கடலூரில் பரபரப்பு

அதிமுக அமைச்சர் சம்பத் மீது செருப்பை வீசிய பொதுமக்கள் : கடலூரில் பரபரப்பு
, புதன், 11 மே 2016 (12:25 IST)
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக அமைச்சர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில், அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறர். அதனால் அவர் தற்போது அந்த பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இன்று அவர் கடலூரில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இளைஞர்கள் அவர் மீது செருப்பை கழற்றி வீசினார்கள். அந்த செருப்பு வாகனத்தின் முன் பகுதியில் விழுந்தது.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஐந்து வருடங்களாய் அமைச்சராய் இருந்த நீங்கள், தொகுதி பக்கமே வரவில்லை. இப்போது ஓட்டு கேட்க வந்து விட்டீர்களா? என்று சிலர் ஆவசேமாக கேள்வி எழுப்பினார்.
 
ஆனால், சம்பத் அதைபற்றி கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோல்வியை ஒத்துக்கொண்ட கருணாஸ்: அவர்கள் எனக்கு எதிராக செயல்படுகின்றனர் என புலம்பல்