கடும் வெயிலில் பரப்புரைக் கூட்டம் நடத்தக் கூடாது : தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (20:20 IST)
கடும் வெயிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


 

 
சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட சில கூட்டங்களில், கடும் வெயில் காரணமாக நான்கு பேர் உயிரிழக்க நேர்ந்தது. எனவே, வெயில் நேரத்தில் தேர்தல் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், கடும் வெயிலில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வெயிலில் இருந்து மக்களை காக்க நிழற்கூறையும், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
 
பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments