Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 ஆம் தேதி மக்கள் நல கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும்: திருமாவளவன்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2016 (09:33 IST)
மக்கள்நல கூட்டணியின் தொகுதி பங்கீடு இம்மாதம் 13 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக, தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
 
அப்போது மோடி அலை வீசிய போதும் பாஜக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. மீதி 37 தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
 
இந்நிலையில் மீண்டும் பாஜக வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
பிரகாஷ் ஜவடேகர் கூறிய கருத்துக்கு விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார்?, அவர் என்ன கருத்து சொல்கிறார்? என்பதற்கு பிறகு மக்கள் நல கூட்டணி தனது முடிவை அறிவிக்கும்.
 
13 ஆம் தேதி மக்கள்நல கூட்டணி சார்பில் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் மக்களை சந்தித்த பிறகு 4 தலைவர்களும் ஒன்று கூடி தொகுதி பங்கீடு பற்றி பேசி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments