Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுரத்தில் ருத்திரதாண்டவம் ஆடிய கருணாநிதி

கோபாலபுரத்தில் ருத்திரதாண்டவம் ஆடிய கருணாநிதி

Webdunia
வியாழன், 19 மே 2016 (11:55 IST)
தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி கடும் விரக்தியில், முக்கிய நிர்வாகிகளை அழைத்து காய்ச்சி எடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிர்ச்சியடைந்தார்.
 
தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதற்கு அடுத்து, திமுக வந்து கொண்டுள்ளது. இருப்பினும், தமிழகம் முழுக்க திமுக தோல்வி முகத்தில் உள்ளது.
 
அப்போது, உடன் இருந்த திமுக நிர்வாகிகளிடம் “தமிழகத்தில் என்னய்யா நடக்குது? நான், அப்பேவே சொன்னேன், பலமான கூட்டணி வேணும்னு சொன்னேன், யார் கேட்டீங்க....” என்று கடும் கோபத்தை காட்டினாராம்.
 
மேலும், தோல்வி விரக்தியில் கருணாநிதி தனது  கோபத்தை காட்டினாராம். உடன் இருந்தவர்கள் அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில், ஆமாம்.. தலைவரே... என அவரது கோபத்தை தணிக்கும் வகையில் ஆறுதல் சொன்னார்களாம்.
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி: கருத்துக்கணிப்பு..!

கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ரூ.150 கோடி மதிப்பில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்.. 4 ஏக்கர்.. 3 கோபுரங்கள்.. 12 மாடிகள்..!

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments