Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைநடிகைகள் என்றால் சும்மாவா? – ஆபாசமாக பேசிய இயக்குனருக்கு சரியான பாடம்!

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (11:38 IST)
நீராவி பாண்டியன்

சின்னத்திரை தொடர் ஒன்றின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஒருவர் துணை நடிகைகளை ஆபாசமாகப் பேசியதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் செம்பருத்தி. இத்தொடரை நீராவி பாண்டியன் எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த சீரியலுக்காக சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமணக் காட்சி ஒன்று  படம் பிடித்துக் கொண்டிருந்த போது அவர் மைக்கில் துணை நடிகைகளை ஆபாசமாக அவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தியான 15க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் அங்கிருந்து வெளியேறி திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் வந்து இயக்குனரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். போலிஸுக்கும் நீராவி பாண்டியனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதுஅப்போது துணை நடிகைகள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இயக்குனர் தங்களிடம் மன்னிப்புக் கேட்டால்தான் வழக்கை வாபஸ் பெறுவோம் என சொல்லியுள்ளனர். இதையடுத்து இயக்குனர் மைக்கில் துணை நடிகைகளை திட்டியது போலவே மன்னிப்புக் கேட்டதை அடுத்து பிரச்சனை முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் சான்ஸ் இல்லையா? டான்னு பேமெண்ட் தரும் தொழிலை சொல்றேன்: சனம் ஷெட்டி

ஏஐ மூலம் ரம்யா சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய வீடியோ? கேஸ் போடுவேன் என எச்சரிக்கை..!

‘விஸ்வாசம்’ படத்தின் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’.. வெற்றிப் பாதைக்குத் திரும்பிய AK

சூர்யாவின் அடுத்தப் படத்தின் பணிகளைத் தொடங்கிய இயக்குனர்& இசையமைப்பாளர்!

‘ரெட்ரோ’ வெற்றி அடைந்தால் தான் வாய்ப்பு.. கார்த்தி சுப்புராஜூக்கு செக் வைத்த பிரபல நடிகர்..!

அடுத்த கட்டுரையில்