Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:01 IST)
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்களுடன் சென்றது.

இந்த விண்வெளி மையத்தில், 4 வீரர்களும்  6 மாத காலம் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தனர்.  இந்த நிலையில் ஆய்வுப் பணி முடிந்து 4 வீரர்கள் பயணித்த விண்கலம்  நேற்று  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

விண்வெளி  மையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள கடலில் பாராசூட்டின் மூலம் இறங்கியது.

இந்த நிலையில் தற்போது விண்வெளி மையத்தில், 3 அமெரிக்க வீரர்களும், 3 ரஷியர்களும்,  1 ஜப்பானியர் என 7 பேர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

18 படிகளில் ஏறியதும் ஐயப்ப தரிசனம்: சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்..

முன்பதிவு இல்லா பெட்டியில் அதிக கூட்டம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மது போதை ஆசாமி..!

தமிழகத்தில் ஏப்ரல் 15 வரை மலையேற்றத்துக்கு தடை! வனத்துறை முடிவுக்கு என்ன காரணம்?

முதல்முறையாக ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments