Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்தி படத்தில் நடிக்கும் யோகி பாபு!

vinoth
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:42 IST)
சந்தானம், சூரி ஆகியோருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உருவாகியுள்ளார் யோகி பாபு. அது மட்டுமில்லாமல் அவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியையும் பெற்றன.

யோகி பாபு சமீபத்தில் கதாநாயகனாக நடித்த லக்கிமேன் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த படம் ஜவான் படத்தோடு ரிலீஸ் ஆனதால் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் பூமர் அங்கிள்’, ‘ஐகோர்ட் மகாராஜா’, ‘வானவன்’, மற்றும் ‘சட்னி சாம்பார்’ ஆகிய திரைப்படங்கள் உருவாக்கத்திலும் ரிலீஸுக்காகவும் காத்திருக்கின்றன.

ஜவான் படம் மூலமாக இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமான யோகி பாபு, இப்போது மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். பூல் புலையா படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அவர் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments