வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது.
2015-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்ப் படமான விசாரணை மூன்று விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் தமிழின் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு படத்தொகுப்பு செய்த மறைந்த படத்தொகுப்பாளர் கிஷோர் சிறந்த எடிட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்தில் முத்துவேல் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.