Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டுகளுக்கு முன்பே சோழனாக விக்ரம்… தற்போது வைரலாகும் விண்டேஜ் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (09:50 IST)
நடிகர் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  முடிந்துவிட்டது.இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு ஜூலை மாதத்தில் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையிலேயே நடக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள பொன்னியின் செல்வன் டீம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான மணிரத்னம் ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று படத்தில் விக்ரம் நடிக்கும் ஆதித்த கரிகால சோழனின் கதாபாத்திர லுக் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்கு முன்பே டாடா சோழா டீ விளம்பரத்தில் விக்ரம் சோழ மன்னர் வேடத்தில் நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments