Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இயக்குனர் ஆசை இருக்கிறது… கூடவே பயமும் இருக்கிறது” – விஜய் சேதுபதி பதில்!

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (07:49 IST)
தென்மேற்குப் பருவக் காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து 50 படங்களில் நடித்துள்ளார். அவரின் 50 ஆவது படமாக நித்திலன் இயக்கியுள்ள மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி படத்தின்  மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய் சேதுபதியிடம் இயக்குனராகும் ஆசை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் “கண்டிப்பாக இயக்குனர் ஆகும் ஆசை இருக்கிறது. ஆனால் கூடவே பயமும் இருக்கிறது. ஃப்ரேமுக்குள் கதை சொல்ல முடியும் என்ற நம்பிக்கை வரும்போது கண்டிப்பாக இயக்குனர் ஆவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் சிகிச்சைப் பற்றி சொன்னார்… இயக்குனர் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

வேட்டையன் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ஹரிஷ் கல்யாண் படம்… இயக்குனர் இவரா?

பிக்பாஸ் முடியுற வரை அத பண்ணாதீங்க… விஜய் சேதுபதிக்கு நிபந்தனை வைத்த நிறுவனம்!

தார்பார் தோல்வி… வேட்டையன் ரிலீஸில் சிக்கலா?- லைகா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விநியோகஸ்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments