Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்பிறையில் கறை எதற்கு? விஜய்சேதுபதிக்கு வைரமுத்து வேண்டுகோள்

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (18:11 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ள 800 திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை, சீமான் உள்பட பலர் விஜய் சேதுபதியிடம் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அறிவுரையையும் எச்சரிக்கையும் செய்து வருகின்றனர் 
 
இருப்பினும் விஜய் சேதுபதி இது குறித்து எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் விஜய் சேதுபதிக்கு தனது கவிதைப் பாணியில் ஒரு அறிவுரை கூறியுள்ளார். அந்த அறிவுரையில் அவர் கூறியிருப்பதாவது  
 
கலையாளர் 
விஜய் சேதுபதிக்கு…
 
சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.
 
நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?
 
இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.
 
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments