Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலு நாச்சியார் கதையைப் படமாகத் தயாரிக்கும் வைகோ

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:21 IST)
மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, வேலு நாச்சியார் கதையைப் படமாகத் தயாரிக்கிறார்.
 


 

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களைத் தைரியமாக எதிர்த்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவருடைய கதையை, நாடகமாக பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருகிறார் மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ. சென்னை நாரத கான சபாவில், நேற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில், நடிகர் சங்கத் தலைவரான நாசர், செயலாளரான கார்த்தி, விஜயகுமார், ரா.பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலு நாச்சியாரின் கதையை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அதை தன்னுடைய கண்ணகி ஃபிலிம்ஸ் சார்பில் படமாக எடுக்க இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments