Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (16:27 IST)
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.



 
ஜிஎஸ்டி வரியால் தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தனியாக 10 சதவீதம் கேளிக்கை வரியை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, கடந்த சில நாட்களாக புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். அவர்களுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவாக இருந்து வருகிறது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்தப் பிரச்னை எப்போது முடியும் என்று தெரியாமல் இழுத்துக்கொண்டே போகிறது. தீபாவளிக்கு விஜய்யின் ‘மெர்சல்’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்கள் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டிரைக் தொடர்ந்தால் புதுப்படங்கள் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments