Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்குப் படங்களுக்குத் தமிழ்நாட்டில் தடை

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (17:30 IST)
தெலுங்குப் படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்த படப்பிடிப்புகளும், 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், போஸ்ட் புரொடக்‌ஷன், விழாக்கள் என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுமே நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ் சினிமாவே முடங்கியுள்ளது.
 
ஆனால், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழிப் படங்கள் வழக்கம் போல் தமிழ்நாட்டில் ரிலீஸாகி வருகின்றன. மக்களும் அந்தப் படங்களைப் பார்க்க தியேட்டருக்குச் செல்கின்றனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தெலுங்குப் படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments